கலைமான் நீரோடையை ஆர்வமாய் 42

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


கலைமான் நீரோடையை ஆர்வமாய் நாடுதல் போல்

இறைவா என் நெஞ்சம் மறவாது உன்னை

ஏங்கியே நாடியே வருகின்றது (2)


1. உயிருள்ள இறைவனில் தாகம் கொண்டலைந்தது -2

இறைவா உம்மை என்று நான் காண்பேன்

கண்ணீரே எந்தன் உணவானது


2. மக்களின் கூட்டத்தோடு விழாவில் கலந்தேனே -2

அக்களிப்போடு இவற்றை நான் நினைக்க

என்னுள்ளம் பாகாய் வடிகின்றது