வான்படைகளின் ஆண்டவரை 84

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


வான்படைகளின் ஆண்டவரை

என் ஆன்மா விரும்பித் தேடுது (2)

அவர் ஆலய முற்றத்தை நாடி

என் உள்ளம் பேருவகை அடைகின்றது


1. அடைக்கலாம் குருவிக்கும் தகைவிலான் குருவிக்கும்

அடைக்கலமானீர் தங்க புகலிடமானீர் -2

பாலை நிலத்திலும் பள்ளத்தாக்கிலும்

மழை தந்தீர் நல்வளம் தந்தீர் -2

நீரே கண்மணியாய்க் காக்கின்றீர்

ஏழ்மையில் தோழனாய் இருக்கின்றீர்

உம்மை நம்புவோர் நல் ஆசி பெறுவார்

ஆவியிலும் உண்மையிலும் வழிநடப்பார்


2. உம் கோவில் முற்றத்தில் ஒருநாள் தங்குவது

ஆயிரம் நாளிலும் மேலானது -2

உமது பாதையில் பயணம் செய்வது

முடிவில்லாதது அது முழுமையானது -2

நீரே எம் கேடயமாய் இருக்கின்றீர்

நீங்காத நிழலாக தொடர்கின்றீர்

உம்மைப் பாடிப் புகழ்ந்திடுவோமே

அன்பிலும் நட்பிலும் நிலைபெறுவோமே