விண்வாழும் தந்தாய் எந்நாளும் உம்தம்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


விண்வாழும் தந்தாய் எந்நாளும் உம்தம்

பொன்நாமம் வாழ்க புவிபோற்ற வாழ்க (2)

இருளெல்லாம் விலக அருளாட்சி வருக -2

மருள் நீக்கி எம்மை மகிழ்விக்க வருக


1. திறம்பாது உம்தம் திருவுள்ளம் விண்ணில்

நிறைவேறல் போல நிலமீதும் வேண்டும் (2)

அறங்காத்து என்றும் அருளோடு வாழ -2

உரஞ்சேர்க்கும் உணவை உவப்போடு தாரும்


2. இன்னாது செய்து இகழ்தோரை நாங்கள்

எண்ணாது அன்றே மன்னித்தல் போல (2)

எண்ணேதும் இல்லா எம்பாவம் தம்மை -2

அன்போடு மன்னித்து அருள்செய்ய வேண்டும்


3. நலியாத வலியார் சோதனைகள் வெல்ல

புவிமீது தீமை அணுகாது வாழ (2)

எமையாளும் வேந்தே இணையில்லா தந்தாய்

உமை நாங்கள் வேண்டி ஒன்றாகத் தொழுதோம்

ஒன்றாகத் தொழுதோம் - 2