அன்பின் இறைவா எந்தன்


அன்பின் இறைவா எந்தன் தலைவா

என்னை அளிக்கின்றேன் - என்றும் உந்தன் அன்பில் வாழ

பாதம் பணிகின்றேன் நான் பாதம் பணிகின்றேன் (2)


1. மலரில் வண்டு மயங்கி நின்று தேனை உண்டு மகிழ்ந்ததோ -2

அந்த மலரும் மயங்கும் மன்னன் உந்தன் தியாகம் கண்டு வியந்ததோ

நானும் இன்று நாளும் உந்தன் பலியாய் மாற விழைகின்றேன்


2. உலகம் யாவும் இறைவன் உந்தன் இல்லமாக விளங்குமோ -2

எம் உள்ளமே உம் இல்லமாயின் கள்ளம் அதிலே கலக்குமோ

நாளும் என்னை இறைவா உந்தன் இல்லமாய் நீ எழுப்புவாய்