மகிழ்ந்திடாய் மாநிலமே உந்தன்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


மகிழ்ந்திடாய் மாநிலமே உந்தன்

மைந்தனின் மாட்சியிலே இன்று

பேரருள் பாய்ந்தது குருத்துவத்தால்

என்று புகழ்ந்திடாய் திருமறையே


1. உலகத்தின் பேரொளியாய் வாழும்

உள்ளத்தின் ஆறுதலாய் (2) - எந்தக்

காலமும் வாழ்ந்திடும் எழில் நிலையாம்

இன்பக் காட்சியே குருத்துவமே (2)


2. குருத்துவ நீச்சுனையாய் திகழ்

கிறிஸ்துவை ஈன்றவளே (2) - இன்று

காய்ந்திடும் பாருக்கு நீர் தெளிக்க

வரும் குருக்களைக் காத்திடுவாய் (2)