இயேசு என்னை அன்பு

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இயேசு என்னை அன்பு செய்கின்றார் -2

அளவில்லாமல் ஆசீர் அருள்கின்றார் -2

இனி துன்பம் ஏதும் இல்லை ஒரு துயரம் வாழ்வில் இல்லை


1. தனிமை என்னும் நாள்களில் என்னைத் தவிக்க வைத்ததுவே

தவறு செய்த நேரத்தில் மனம் பதறித் துடித்ததுவே (2)

இனியும் வாழ்வு கிடைக்குமோ என்று கலங்கித் தவித்து நின்றேன்

இதயம் தேடும் தலைவனே நான் காணத் துடிக்கின்றேன்

தாயைப்போல தேடி வந்து என்னை அணைத்தாரே

தழுவி அணைத்தாரே


2. உறவுகள் என்னை வெறுத்தபோது உள்ளம் கலங்கி நின்றேன்

உண்மைக்காக உழைத்த நேரம் உறவில் தேடி வந்தேன் (2)

என்றும் மாறா இறைவனை நான் காண வேண்டி நின்றேன்

ஏழை வாழ்வில் ஏற்றம் காண ஏங்கிக் காத்து நின்றேன்

இரக்கம் பொழியும் இறைவன் என்னை தேடி வந்தாரே

அன்பைப் பொழிந்தாரே