தேவா உன் திருவடியை என்றென்றும் நான் தேடுவேன்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


தேவா உன் திருவடியை என்றென்றும் நான் தேடுவேன்

நாதா உன் சந்நிதியை தினந்தோறும் நான் நாடுவேன் (2)

சுகமான நினைவாலே சுரமான சொல்லாலே - 2

நிதம் உந்தன் பதம் தேடுவேன் - உன்

அருளாலே உயிர் வாழுவேன்


1. இருளான உலகத்திலே நீ ஒளியாக வரவேண்டுமே - 2

தடுமாறி தவறாக நான் வாழும்போது

வழிகாட்டி எனைக் காக்க வா எனக்காக உயிர் வாழ்பவா

ஒளியாக வழியாக உயிராக வந்து

எனக்காக உயிர் நீத்தவா - கல்வாரி பலியானவா


2. நிலையில்லா உலகத்திலே நீ நிலை வாழ்வு தரவேண்டுமே -2

பொய்யான சுகம் தேடி நான் வாழும்போது

மெய்ஞானம் சுடர் ஆனவா இருள்நீக்கி அருள் ஆனவா

உயிராக உறவாக நிறைவாழ்வு தந்து

இறையாக எனை ஆள்பவா - என் இயேசு மனுவானவா