எல்லையில்லாத அன்பாலே உம்


எல்லையில்லாத அன்பாலே உம்

ஏக மகனை எமக்களித்த பிதாவே

ஏற்றருள்வீர் எம் பலிப்பொருளிதையே

கல்மனம் வெயில் முன் பனிமலைபோல

கசிந்துருகிடுமே உம் நினைவாலே


1. புலன்களை அடக்கி மனதினை ஒடுக்கி

புரிந்திடும் ஒறுத்தல் முயற்சிகள் அனைத்தும்

நலன்களின் சுனையே உமக்களிக்கின்றோம்

நலிந்திடும் எளியோர் நலம் பெறச் செய்வீர்


2. உடலினை ஒறுத்து வன்செயல் அகற்றி

உள்ளத்தை என்றும் மேலே உயர்த்தி

இடர்களைப் பொறுத்து உம் மகனோடு

இனிதுமைப் புகழும் வரமருள்வீரே