இயேசு இயேசு என்று


இயேசு இயேசு என்று அழைத்து பேசு பேசு உன் கதையை

உந்தன் குரலைக் கேட்டு உன்னை மீட்டு

வானகம் சேர்க்கும் தேவனவர்


1. வாழ்வாய் வழியாய் உயிராய் மண்ணில்

சுடராய் அணையா ஒளியாய் (2)

வந்தார் மாபரன் இயேசு உயிர் தந்துன்னை மீட்டார் இயேசு

கல்வாரி சிகரமதில்


2. பாவிகள் நம்மை மீட்கவே உலகில்

ஆதவனாய் உயிர்த்தெழுந்தார் (2)

போதனைகள் பல தந்து நம்மை

வேதனையை விட்டு எழச் செய்தார் - கல்வாரி சிகரமதில்