இமைப் பொழுதேனும் எனைப்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இமைப் பொழுதேனும் எனைப் பிரியாமல்

காக்கும் நல் தேவனாக

எல்லாமும் தந்து என்னோடு இருக்கும்

இயேசுவே வாழ்க வாழ்க -3


1. இயேசுவே உமது பெயரைச் சொன்னாலே

இதயத்தில் கவலைகள் மறையுதையா

நெஞ்சினில் உமையே நினைக்கின்ற போது

உள்ளத்தில் அமைதி பிறக்கின்றது (2)

நலம் தரும் நல்லவரே எழுந்திங்கு வாருமையா

குறைவில்லா புதுவாழ்வு தருபவர் நீரல்லவா

ஆயிரம் ஆயிரம் பாடல்கள் பாடி

ஆண்டவா உம்மைத் துதிக்க வந்தேன்


2. கானத்தை இழந்த பாடலைப்போல

உனை நான் பிரிந்தேன் வாழ்க்கையிலே

உன் திரு வார்த்தையை தியானிக்கும் போது

பலன் தரும் நல்ல நிலமானேன் (2)

ஆகாய கங்கையைப் போல் அருள் மழை பொழிபவரே

பூமழை தூவி உந்தன் பொற்பாதம் பணிந்து வந்தேன்

கண்மணி போல் என்னைக் காக்கும் ராஜா

கானங்கள் இசைத்துத் துதிக்க வந்தேன்