இயேசு என்னும் நாமம்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இயேசு என்னும் நாமம் பேசுகின்றபோது

என்னுள்ளம் மகிழ்வுகொண்டது - அதை

ஏழிசையில் பாடுகின்றது (2)


1. நான் மீட்பளிக்கும் மகிழ்வு கொண்டேன்

வான்வீட்டவரின் அழைப்பைக் கேட்டேன் (2)

பெற்றப் பெரும்வாழ்வைப் பகிர்ந்து கொள்கவென்று

பேசியவர் அனுப்பிவைத்தார் தன் ஆவியரும் உயிரும் தந்தார்


2. என் உள்ளமெல்லாம் கொள்ளை கொண்டார்

தன் இல்லம் அதை அங்கு கண்டார் (2)

இயேசுவும் நானும் மானிடர் யாவரும்

சேர்ந்தங்கே வாழ்ந்திருப்போம் சகோதரராய் வாழ்ந்திருப்போம்