தந்தானைத் துதிப்போமே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


தந்தானைத் துதிப்போமே

திருச்சபையோரே கவி பாடிப்பாடி

விந்தையாய் நமக்கனந்தனந்தமாக

விள்ளற் கரியதோர் நன்மை மிகமிக


1. ஒய்யாரத்துச் சீயோனை நீயும்

மெய்யாக களிகூர்ந்து சேர்ந்து

ஐயனேசுக்குனின் கையைக் கூப்பித் துதி

செய்குவையே மகிழ் கொள்ளுவையே நாமும்


2. கண்ணாரக் களிகூர்ந்து நன்மைக்

காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்து

எண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மை

இன்னு முன்மேற் சோனாமாரிபோற் பெய்துமே


3. சுத்தாங்கத்து நற்சபையே உனை

முற்றாய்க் கொள்ளவே அலைந்து திரிந்து

சத்துக் குலைந்துனைச் சத்தியாக்கத் தம்மின்

ரத்தத்தைச் சிந்து எடுத்து உயிர்வரம்


4. தூரந் திரிந்த சீயோனே உனைத்

தூக்கி யெடுத்துக் கரத்தினிலேந்தி

ஆரங்கள் பூட்டி யலங்கரித்து உனை

அத்தன் மணவாட்டி யாக்கினது என்னை


5. சிங்காரக் கன்னிமாரே உம்

அலங்காரக் கும்மி யடித்துப் படித்து

மங்காத உன் மணவாளன் இயேசுதனை

வாழ்த்தி வாழ்த்தி ஏத்திப் பணிந்திடும்