மனித நேயமே உயர்வேதம்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


மனித நேயமே உயர்வேதம் - இதை

மன்னன் இயேசு வாழ்ந்து சொன்னாரே - 2

உன்னையே நீ அன்பு செய்தல் போலவே உன் அயலானை

நேசி என்றாரே இயேசுமகான் அனைவரையும் அன்பு செய்தாரே


1. பழிக்கஞ்சா கள்வர்களால் தாக்கப்பட்டு ஒரு

வழிப்போக்கன் சாலையிலே வீழ்ந்துகிடந்தான் (2)

வேதங்கள் கற்றறிந்த குருவும் கண்டார் - 2

அவர் வேதனையை காணாமல் தன்வழி சென்றார் 2

துன்பத்தில் வாழும் மனிதரெல்லாம் அயலாரே தம் அயலாரே

அன்புடன் அவர்க்கு உதவுதலே

புண்ணியமே வாழ்வில் புண்ணியமே


2. பரிதவித்து கிடப்பவன் கேட்பாரில்லை - கோயில்

பணியாளர் பார்த்துக்கொண்டு நேரே சென்றார் (2)

அவதியுறும் யாவருக்கும் உதவிடவேண்டும் - 2

இந்த எண்ணம் தானே மனிதனுக்கு அவசியம் வேண்டும் - 2

துன்புறக் கண்டால் துடிக்கின்ற மனம் வேண்டும் (நல்ல)

சோதரராக பிறரைக்கண்டு அணைத்திட வேண்டும் (என்றும்)