ஆண்டவரே, இரக்கமாயிரும் உன்னதங்களிலே இறைவனுக்கே மாட்சிமை உண்டாகுக.

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஆண்டவரே, இரக்கமாயிரும்

ஆண்டவரே, இரக்கமாயிரும்.

கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.

கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.

ஆண்டவரே, இரக்கமாயிரும்.

ஆண்டவரே, இரக்கமாயிரும்.


உன்னதங்களிலே இறைவனுக்கே மாட்சிமை உண்டாகுக.

உலகினிலே நன் மனத்தவர்க்கு அமைதியும் உண்டாகுக.

புகழ்கின்றோம் யாம் உம்மையே வாழ்த்துகின்றோம் இறைவனே.

உமக்கு ஆராதனை புரிந்து உம்மை மகிமைப் படுத்துகின்றோம் யாம்.

உமது மேலாம் மாட்சிமைக்காக உமக்கு நன்றி நவில்கின்றோம்.

ஆண்டவராம் எம் இறைவனே இணையில்லாத விண்ணரசே.

ஆற்றல் அனைத்தும் கொண்டு இலங்கும் தேவ தந்தை இறைவனே.

ஏகமகனாகச் செனித்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து இறைவனே.

ஆண்டவராம் எம் இறைவனே இறைவனின் திருச் செம்மறியே.

தந்தையினின்று நித்தியமாகச் செனித்த இறைவன் மகனே நீர்.

உலகின் பாவம் போக்குபவரே நீர் எம்மீது இரங்குவீர்.

உலகின் பாவம் போக்குபவரே எம் மன்றாட்டை ஏற்றருள்வீர்.

தந்தையின் வலத்தில் வீற்றிருப்பவரே நீர் எம்மீது இரங்குவீர்.

ஏனெனில் இயேசு கிறிஸ்துவே நீர் ஒருவரே தூயவர்.

நீர் ஒருவரே ஆண்டவர் நீர் ஒருவரே ஆண்டவர்.

நீர் ஒருவரே ஆண்டவர் நீர் ஒருவரே உன்னதர்

பரிசுத்த ஆவியுடன் தந்தை இறைவனின்

மாட்சியில் உள்ளவர் நீரே -ஆமென்.


உன்னதத்தில் இறைவனுக்கு மாட்சிமை உண்டாகுக.

அதன் இறைவனை வாழ்த்திடுவோம் அதன் இறைவனைப் புகழ்திடுவோம்

உன்னதத்தில் இறைவனுக்கு மாட்சிமை உண்டாகுக.


உமது மேலாம் மாட்சிமைக்காக உமக்கு நன்றி நவில்கின்றோம்.

ஆண்டவராம் எம் இறைவனே இணையில்லாத விண்ணரசே.

ஆற்றல் அனைத்தும் கொண்டவரே - 2

இறைவனின் செம்மறியே தூயவனே தேவனே

உன்னதத்தில் இறைவனுக்கு மாட்சிமை உண்டாகுக.


ஏகமகனாகச் செனித்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து இறைவனே.

ஆண்டவராம் எம் இறைவனே இறைவனின் திருச் செம்மறியே.

தந்தையினின்று நித்தியமாக - 2

செனித்த இறைவன் மகனே நீர்

உன்னதத்தில் இறைவனுக்கு மாட்சிமை உண்டாகுக.


உலகின் பாவத்தை வென்றவரே - நீர் எம் மன்றாட்டை ஏற்றருள்வீர்.

தந்தையின் வலத்தில் இருப்பவரே - நீர் எம் மன்றாட்டை ஏற்றருள்வீர்.

நீரே உன்னத தூயவரே - 2

தந்தை தூய ஆவியோடு இருப்பவர் நீரே

உன்னதத்தில் இறைவனுக்கு மாட்சிமை உண்டாகுக.