இறையாட்சியின் மனிதர்களே மரிமைந்தனின் சீடர்களே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இறையாட்சியின் மனிதர்களே மரிமைந்தனின் சீடர்களே

இறை அழைக்கின்றார் அன்பில் இணைக்கின்றார்

புது உலகொன்றைப் படைத்திட வாருங்களே


1. நாம் வாழும் இந்த பூமி நலமாகிட வேண்டாமா

நலிவுற்றவர் வாழ்வினில் நீதி நின்று நிலைத்திட வேண்டாமா (2)

இயேசுவே காட்டிய வழியுண்டு இயங்கிட நமக்கொரு நெறியுண்டு (2)

எதிர் நோக்குடன் வாருங்கள் கதிர் விளைந்திடும் காணுங்கள் -2


2. இன்று மானிட இதயங்களெல்லாம் ஒன்று சேர்ந்திட வேண்டாமா

இறையாட்சியின் மாற்றங்கள் எங்கும் நிறைவேறிட வேண்டாமா (2)

மாநிலம் முழுவதும் ஒரு குடும்பம் மாந்தர்கள் எல்லாம் உடன்பிறப்பே (2)

இந்த உண்மையை வாழ்ந்திடுவோம் எந்த பகையினும் வென்றிடுவோம் (2)