இறையாட்சி மலர்ந்திட நம்மில் புதுயுகம் பிறந்தது

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இறையாட்சி மலர்ந்திட நம்மில் புதுயுகம் பிறந்தது

நிறைவாழ்வு தொடர்ந்திட இன்று நம்மையே அழைக்குது

நாம் இணைந்தே சென்றிடுவோம்

புதிய காவியம் படைத்திடுவோம் (2)


1. நொறுங்கிய மனிதம் உயிர்பெற அழிந்த வாழ்வு வளம்பெற -2

தொலைந்த முகங்கள் உருப்பெற

இறைவன் நம்மில் எழுகின்றார் (2)

கரங்கள் நீட்டி அழைக்கின்றார் புதிய உலகம் படைக்கின்றார்


2. பகைமை எங்கும் நீங்கிட அன்பில் நாளும் உறைந்திட -2

நிறைவை எங்கும் கண்டிட இறைவன் நம்மில் எழுகின்றார் -2

இணைந்து வாழ பணிக்கின்றார் பிறரில் மகிழ அழைக்கின்றார்