இறைவனைத் தேடும் இதயங்களே வாருங்கள்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இறைவனைத் தேடும் இதயங்களே வாருங்கள்

என் இறைவன் யாரென்று சொல்வேன் கேளுங்கள்


1. பாடும் குயிலுக்கு பாடச்சொல்லித் தந்தவன் யார்?

ஆடும் மயிலுக்கு ஆடச் சொல்லித் தந்தவன் யார்?

அவரே என் இறைவன் அவர்தாள் நான் பணிவேன்

அவர்தாள் நான் பணிந்தால் அகமே மகிழ்ந்திருப்பேன்


2. வானும் மண்ணும் வாழும் யாவும் படைத்தவர் யார்?

வாழும் உயிருக்கு வாழ்வின் முடிவாய் நிலைப்பவர் யார்?

என்னென்ன விந்தைகள் எங்கெங்கு காண்கின்றோம்

அனைத்திற்கும் அடிப்படையில் அவர்தான் காரணம்