நீயின்றி வாழ்வேது இறைவா

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


நீயின்றி வாழ்வேது இறைவா - உன்

நினைவின்றி மகிழ்வேது தலைவா

நீயின்றி வாழ்வேது இறைவா


1. உலகத்தில் நூறாண்டு நான் வாழ்ந்தபோதும் - உன்

இல்லத்தில் ஒருநாளே போதும்

பலகோடி வார்த்தைகள் நான் கேட்ட போதும் - உன்

திருநாவின் சொல் ஒன்றே போதும்

உன்னோடு நான் வாழ்ந்து உன் வார்த்தை நான் கேட்டு

உன்னில் நான் சரணாக வேண்டும்


2. கற்பாறை மீதெந்தன் வீடாகினாலும் - உன்

பொற்பாதத் துணை நாளும் வேண்டும்

உலகோரின் உறவென்னை உயர்வாக்கினாலும் - உன்

கரம்தானே எனைத் தாங்கிக் கொள்ளும் (2)

உப்பாக ஒளியாக உண்மைக்குச் சான்றாக

எப்போதும் நான் வாழவேண்டும்