அர்ப்பணமாகிடும் நேரமிது


அர்ப்பணமாகிடும் நேரமிது

அர்ப்பணிக்கின்றோம் இறைவா இறைவா இறைவா


1. இறையாய் கருவாய் பலிப்பொருளாய்

இயங்கிடும் திருப்பலி தனிமுதலே (2)

அரும்பலி தனைத் தரும் எங்களையும் -2

அர்ப்பணம் தந்தோம் ஏற்றிடுவாய்


2. திருப்பலிச் சுடராய் ஒளிர்பவனே

திரித்துவ இணைப்பாய்க் கலந்தவனே (2)

திருமறைப் பயிர் வளர் பலிப் பொருளாய் - 2

திகழ்ந்திடும் தியாகப் பலி ஏற்பாய்