தமிழால் உன் புகழ் பாடி தேவா நான் தினம் வாழ

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


தமிழால் உன் புகழ் பாடி தேவா நான் தினம் வாழ

வருவாயே திருநாயகா வரம் தருவாயே உருவானவா (2)


1. எனைச்சூழும் துன்பங்கள் கணையாக வரும்போது

துணையாகி எனையாள்பவா (2)

மனநோயில் நான் மூழ்கி மடிகின்ற பொழுதங்கு -2

குணமாக்க வருவாயப்பா எனை உனதாக்கி அருள்வாயப்பா


2. உலகெல்லாம் இருளாகி உடனுள்ளோர் சென்றாலும்

வழிகாட்டும் ஒளியானவா (2)

நீதானே எனக்கெல்லாம் நினைவெல்லாம் நீதானே -2

நாதா உன் புகழ்பாடுவேன் எனை நாளெல்லாம் நீ ஆளுவாய்