உதயங்கள் தேடும் இதயங்கள் தனிலே இறையருள் மலர

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


உதயங்கள் தேடும் இதயங்கள் தனிலே இறையருள் மலர

மணங்கள் பூக்கள் சிந்த வசந்தம் வாழ்வில் பொங்க

வாரும் இறைகுலமே (2)


1. இரவினில் தவித்திட்ட வேளையிலே - முழு

நிலவாய் நிலமதில் நடந்தவனே

இடர்தனில் துடித்திட்ட பொழுதினிலே - எங்கள்

இதயத்தில் மலர்ந்திடும் சுடரொளியே

பாவம் நம்மிலே மறையாதோ தேவன்

பாதம் நம்மிலே பதியாதோ

சோகங்கள் மறைந்திட அருள்புரிவாய்


2. கவலைகளால் மனம் கலங்கையிலே - உந்தன்

கரங்களால் என்னைத் தாங்க வந்தாய்

ஆறுதல் தேடி நான் அலைகையிலே - உந்தன்

விழிகளில் கருணை மழை பொழிந்தாய்

புதிய உறவுகள் மலர்ந்திடவே - உந்தன்

அன்பின் பலியினில் கலந்திடவே

ஓர்குலமாய் ஒன்று கூடிவந்தோம்